பெண் யானைக்கு தீவிர சிகிச்சை; பாசப்போராட்டம் நடத்தும் குட்டி யானை

75பார்த்தது
பெண் யானைக்கு தீவிர சிகிச்சை; பாசப்போராட்டம் நடத்தும் குட்டி யானை
கோவை: மருதமலை அடிவார வனசரகப் பகுதியில் 2வது நாளாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் பெண் யானைக்கு வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தாய் யானை அருகே தவித்தபடி குட்டி யானை சுற்றி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் வழிகாட்டுதலின்படி கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கின்றனர். யானைக்கு மருத்துவ சிகிச்சையுடன் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் யானை மற்றும் குட்டி தொடர் கண்காணிப்பில் உள்ளது.

தொடர்புடைய செய்தி