ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது அனுமதிச் சீட்டு இல்லாவிட்டால், இரவில் தனியாகப் பயணிக்கும் இளம்பெண் அல்லது பெண்ணை இரயிலில் இருந்து இறக்குவதற்கு TTE-க்கு அதிகாரம் இல்லை. அபராதம் கட்ட பணம் இல்லாவிட்டாலும் பயணத்தை தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.