பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம்!

65பார்த்தது
பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம்!
தூத்துக்குடியில் வளர்ப்பு பூனையை காணவில்லை என்ற போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் பூனையின் அடையாளங்கள் மற்றும் தனது செல்போன் எண்ணை குறிப்பிட்டுள்ளார். பூனையை காணவில்லை என்ற போஸ்டரை பார்த்த பலரும் அதனை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி