“எங்க கைல ஆட்சி இருந்தா தமிழ்நாட்டை சுத்தம் பண்ணிடுவோம்”

75பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில், அன்புமணி ராமதாஸ் இன்று கள்ளக்குறிச்சி சென்று பலியானவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல் துறைக்கு தெரியாம யாரும் கள்ளச்சாரயம் காய்ச்ச முடியாது. ஒரு மாதம் எங்களது கையில் ஆட்சி இருந்தா போதும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் சுத்தம் செய்துவிடுவோம்” என கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி