மத்தியப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

51பார்த்தது
மத்தியப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஹவுசிங் போர்டு காலனி, கீர்த்தி நகர், நவ்கர் நகர், ஆனந்த் நகர், மாதா சௌக் மற்றும் குல்மோகர் காலனி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

தொடர்புடைய செய்தி