3 புதிய குற்றவியல் சட்டங்கள் - மம்தா கடிதம்

62பார்த்தது
3 புதிய குற்றவியல் சட்டங்கள் - மம்தா கடிதம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்டது. 3 புதிய குற்றவியல் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்தின் இருட்டடிப்பான காலம். ஆகையால், 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி