விவாகரத்து செய்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ஜீவனாம்சம் தான். நியாயமான காரணங்கள் இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்காமல் கணவன் தவிர்க்கலாம். கணவன் வாழ தயாராக இருந்து மனைவிக்கு பிடிக்காமல் பிரிந்து சென்றாலோ அல்லது மனைவிக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு, வேறு திருமணம் நடந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தாலோ அல்லது பரஸ்பரம் இருவரும் மனம் ஒத்து ஜீவனாம்சம் தேவையில்லை என பிரிந்து சென்றாலோ கணவன், மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை.