தமிழ்நாட்டில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் கோடை மழை காரணமாக பயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைக் கணக்கெடுக்கும் பணியை வேளாண்துறை அலுவலர்கள் இன்று (மே 22) முதல் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.