30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 4 பேர் பலி

82பார்த்தது
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 50 பேருடன் சென்ற தனியார் பேருந்து, 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பரத்வாடா தரணி சாலையில் செமடோஹ் அருகே வேகமாக சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி