தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு

51பார்த்தது
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நெல்லை, குமரி, நீலகிரிக்கு ஒரு குழுவிற்கு 30 பேர் என 300 வீரர்கள் கொண்ட தலா 3 குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கோவையில் 30 வீரர்களை கொண்ட ஒரு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி