பிரதமர் நரேந்திர மோடி அரசு சில தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மோடி பதிலளித்தார். இதுகுறித்து பேசிய அவர், "நான் நேர்மையற்ற செயல்களைச் செய்திருந்தால், நான் தூக்கிலிடப்பட வேண்டும். நான் தவறான வழியில் நடந்திருந்தால் நான் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் எனது நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களை நான் மதிப்பேன்", என அவர் கூறியுள்ளார். நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி சமமாக கவலைப்படுவதாக மோடி கூறியுள்ளார்.