அதிமுக கொடி, சின்னம் - ஓபிஎஸ் வழக்கில் உத்தரவு

118362பார்த்தது
அதிமுக கொடி, சின்னம் - ஓபிஎஸ் வழக்கில் உத்தரவு
அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் இந்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே போல் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாட தடை விதிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதம் முன்வைத்த நிலையில், தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-க்கு தடையில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி