மதுவிலக்கு சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

58பார்த்தது
மதுவிலக்கு சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி