ரூ.16.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

72பார்த்தது
ரூ.16.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில், வந்து இறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த 3 பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் சுருள் வடிவில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ.16.17 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி