சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்றதற்கு பிறகு அனுமதி கிடைத்த நிலையில் இந்த அகழாய்வை பணிகளானது வெம்பக்கோட்டை, திருமலாபுரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட எட்டு இடங்களில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.