அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவரை ஓடும் காரில் நான்கு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செவ்வாய்க்கிழமை மாலை நான்கு இளைஞர்கள் சிறுமியை ஒரு வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தேசிய நெடுஞ்சாலை 31- இல் ஓட்டிச் சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.