பட்டியலின மக்கள் மீது தாக்குதல்.. 98 பேருக்கு ஆயுள் தண்டனை

51பார்த்தது
பட்டியலின மக்கள் மீது தாக்குதல்.. 98 பேருக்கு ஆயுள் தண்டனை
கர்நாடகாவில், கொப்பல் மாவட்டம் மரகும்பி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு சினிமா டிக்கெட் தொடர்பான தகராறில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. அவர்களது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 117 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றது. அதில், பட்டியலின மக்களை தாக்கிய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Job Suitcase

Jobs near you