அன்னபூர்ணா யோஜனா திட்டம் ஏப்ரல் 1, 2000 அன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் உணவு கேட்டரிங் தொழிலை தொடங்க விரும்பும் பெண்களுக்கு மட்டுமே. இதன் மூலம் கடனாக ரூ. 50,000 பெறலாம். சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் போன்றவற்றை இந்தக் கடன் மூலம் வாங்கலாம். கடன் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இந்தக் கடனைப் பெற எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொள்ளலாம்.