குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு நடந்த கொடூரம்: வீடியோ எடுத்தவர் கைது

50பார்த்தது
குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு நடந்த கொடூரம்: வீடியோ எடுத்தவர் கைது
மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயின் நகரில் கடந்த செப்., 4-ல் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் வைத்து குப்பை சேகரிக்கும் பெண்ணை ஒருவர் பலாத்காரம் செய்தார். அந்த வழியாக பலரும் சென்றும் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடூர செயலில் ஈடுபட்ட லோகேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சம்பவத்தை வீடியோ எடுத்து பரப்பிய ஆட்டோ ஓட்டுனர் சலீம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி