அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணி மற்றும் ஷு வழங்குவதற்கு பாத அளவீடுகளை கணக்கிடும் பணியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பாத அளவுகளை கணக்கிட்டு அதற்கென உள்ள செயலியில் பதிவேற்றம் செய்கின்றனர். இப்பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு மாணவர் ஒருவருக்கு ரூ.2 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. பணிகள் முடிந்து விரைவில் காலணிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.