வீட்டில்
வேலை பார்த்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில்
திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மற்றும் அவரது மருமகள் மெர்லின் ஆகியோரின் நீதிமன்றக் காவலை பிப்.23ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து இருவரும் காணொலி மூலம் ஆஜரான நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டது. முன்னதாக இருவரின் ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.