'தூண்டிலில் புழுவை போட்டு மீன் பிடிப்பது இன்றைய அரசியல்'

82பார்த்தது
'தூண்டிலில் புழுவை போட்டு மீன் பிடிப்பது இன்றைய அரசியல்'
நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, அவிநாசியில் நேற்று (ஏப்ரல் 9) பரப்புரையில் சீமான் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், வாக்களிக்க எதற்கு பணம்? பணம் கொடுத்து வாக்கு பெறுபவர் சேவை செய்வாரா? ரூ.500 ஐ கொடுத்து ரூ.500 கோடியை எடுப்பதுதான் இன்றைய அரசியல், தூண்டிலில் புழுவை போட்டு மீன் பிடிப்பது போல மாறிவிட்டது. ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும். இங்கு யாருக்கும் கொள்கை, கோட்பாடு இல்லை. ஆகவே தான் தனித்து களம் காண்கிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி