சகோதரத்துவத்தை நிலைநாடுவோம் - வைகோ ரம்ஜான் வாழ்த்து

83பார்த்தது
சகோதரத்துவத்தை நிலைநாடுவோம் - வைகோ ரம்ஜான் வாழ்த்து
இஸ்லாமியர்களின் முதன்மைப் பண்டிகைகளுள் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தை உரைத்திடும் போன்னாள். அண்ணலார் நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரம்ஜான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்பட பாடுபடுவோம் எனச் சூளுரைத்து, மதிமுக சார்பில் இனிய ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி