திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

71பார்த்தது
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கேரிபாளையத்தில் கோட்டக்ஸ் பனியன் உற்பத்தி ஆலை இயங்கி வந்தது. இங்கு இன்று (ஜூலை 4) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி