தீ விபத்து.. ஒரே குடும்பத்தில் நால்வர் பலி

53பார்த்தது
தீ விபத்து.. ஒரே குடும்பத்தில் நால்வர் பலி
டெல்லி பிரேம்நகரில் உள்ள வீடு ஒன்றில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த இன்வெர்ட்டரில் ஏற்பட்ட தீ மளமளவென மேல் தளத்திற்கும் பரவியது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவரும் மூச்சுத்திணறி, தீயில் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஹிரா சிங் (48), அவரது மனைவி நீது சிங் மற்றும் மகன்கள் ராபின் சிங் (22), லக்ஷய் (21) என அடையாளம் காணப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி