9 மாத பெண் குழந்தையை நடுரோட்டில் வீசி கொன்ற தந்தை

58பார்த்தது
9 மாத பெண் குழந்தையை நடுரோட்டில் வீசி கொன்ற தந்தை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (24). இவருக்கும் பகுதியை சேர்ந்த நாகசக்தி (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகனும், நிதன்யாஸ்ரீ என்ற 9 மாத குழந்தையும் உள்ளது. திருமணம் செய்த சில நாட்களிலிருந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 9 மாத குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இந்நிலையில் விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி