மகன் மிதித்து தந்தை உயிரிழப்பு

534பார்த்தது
மகன் மிதித்து தந்தை உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பழைய சென்னல்குளத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 75). இவருடைய மகன் கணேசன் (45) மனநலம் பாதிக்கப்பட்ட இவரை குருசாமி பராமரித்து வந்தார். இவருக்கு சாப்பாடு கொடுக்க செல்லும்போதெல்லாம் தந்தையை அவர் தாக்குவது உண்டு. மகன் என்பதால் குருசாமி அதனை பொறுத்துக்கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று மகனுக்கு உணவு கொடுக்க குருசாமி சென்றுள்ளார். அப்போது குருசாமியை தள்ளிவிட்டு கடித்து வைத்து கடுமையாக மிதித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி