கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள்

64பார்த்தது
கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள்
டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கருப்பு தினம் கடைபிடிக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயி சுபகரன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அரியானா பா.ஜ.க முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி