2 வயது குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை

52பார்த்தது
2 வயது குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம், மதியாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலேமான். இவரது 2 வயது மகளை நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் காணவில்லை என சர்தானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவரின் 2 குழந்தைகள் இதற்கு முன்பு காணாமல் போயுள்ளது தெரியவந்தது. பின்னர் சுலேமானை பிடித்து விசாரித்ததில் அவர் தன் குழந்தையை கால்வாயில் தூக்கி வீசியதாக கூறினார். வீட்டில் 2 வயது பெண் குழந்தையும், அவளது சகோதரனும் சண்டை போட்டதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி