தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா

2602பார்த்தது
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதி கிராம சாந்தி நடைபெற்று பிறகு புதன்கிழமை அதிகாலை பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. அதனை தொடர்ந்து திருக்கம்பம் நடப்பட்டு, பதினைந்து நாட்களுக்குப் பிறகு இன்று காலை அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமி திருவீதி உலா நடைபெற்று, படைக்கலத்துடன் பவானி ஆற்றுக்கு சென்று, சிறப்பு பூஜைகள் செய்து, அதன் பிறகு கோவில் வந்தடைந்தது. குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து, முதலாவதாக பூசாரி சரத்குமார் குண்டம் இறங்கினார். அதன்பின்பு வரிசையாக காத்திருந்த ஏராளமான பொதுமக்கள், பெண்கள் குழந்தைகளுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி