ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை

564பார்த்தது
ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை
ஈரோடு என். ஜி. ஓ. காலனி, 7-வது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா. தனியார் கல்லூரி பேராசிரியை. இவர்களது ஒரே மகன் ஆம்புரோஸ். பெங்களூரில் ஐ. டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று சுப்பிரமணி தேனில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் கிளம்பி சென்று விட்டார். சுப்பிரமணி வாடகை வீட்டில் மேல்மாடிகள் தங்கி இருந்தார்.

இன்று காலை வீட்டின் உரிமையாளர் மகன் மேல் மாடியில் சென்ற போது சுப்பிரமணி வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சுப்பிரமணிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

சுப்பிரமணி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 150 பவுன் நகைகள், ரூ. 1. 50 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி