கோபியில் ஆர்வமாக ஓட்டு போட்ட வாக்காளர்கள் - வீடியோ

2971பார்த்தது
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்களாளர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்

தமிழகத்தில் 18ஆவது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்தனர்.


இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளில் தங்களது வாக்குகளை செலுத்தினர். மேலும் மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியவர்கள் எளிதில் வாக்களிக்கும் விதமாக வீல் சேர் மூலம் அழைத்து சென்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த பணிகளில் காவல்துறையினரும், தேர்தல் பணி குழுவினரும் பணியாற்றினர்.

தொடர்புடைய செய்தி