இலவச நீர் மோர் பந்தலை கோபி எம் எல் ஏ திறந்து வைத்தார்.

61பார்த்தது
கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் பேருந்து நிலையம் எதிரே இலவச நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது, இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனையொட்டி கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரே வெயிலில் வரும் பொதுமக்கள் இலவசமாக நீர் மோர் அருந்தும் வகையில் அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பந்தல் அமைத்து அங்கு இளநீர், நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவை இலவசமாக பொதுமக்கள் பெரும் வகையில் வைக்கப்பட்டிருந்தன,

இந்த நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது, இந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அங்கிருந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் இலவசமாக நீர் மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக வழங்கப்படும் நீர் மோர், இளநீர் தர்பூசணி ஆகியவற்றை பெற்றுச் சென்றனர்

தொடர்புடைய செய்தி