சிசிடிவி கேமரா பழுது வேட்பாளர்கள் அதிருப்தி

567பார்த்தது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்தது இந்த நாடாளுமன்ற தொகுதியில் கிழக்கு ஈரோடு மேற்கு மொடக்குறிச்சி காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியது இங்கு பதிவாக வாக்குகளை வாக்கு என்று மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு அதற்கு சிசிடிவி கேமராக்கள் 221 கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் மூன்றெழுத்து பாதுகாப்புடன் தீவிர பாதுகாப்பு வருகிறது இதன் ஒரு பகுதியாக நேற்று ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிசிடிவி கேமரா தொழில் நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்தது அதனை உடனடியாக சரி செய்து கேமரா பொருத்தப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் ஏப்ரல் 30 அதிகாலை நான்கு மணி அளவில் நேரத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிசிடிவி கேமரா ஒயர் மெல்ட் ஆன காரணத்தினால் சிசிடிவி கேமரா கண்ட்ரோல் அறைக்கு வீடியோக்கள் காட்டவில்லை இதனை கண்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சிசிடி கேமரா சரி செய்து போடப்பட்டது தொடர்ந்து இரண்டாவது நாளாக இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருவதால் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி