தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேட்டியில், "தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாஜகவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். பூதாகாரமாக இந்த விவகாரம் உருவெடுக்கும். இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், உலகிலேயே மிகப் பெரிய ஊழல் என்பதை மக்கள் அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையால், ஆளும் பாஜக அரசாங்கம் வாக்காளர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.