மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்

77பார்த்தது
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்
தமிழ் சினிமாவில் 2008 இல் வெளியான 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் இயக்குநர், நடிகராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு சமுத்திரகனி இயக்கிய 'நாடோடிகள்' படத்தில் ஹீரோவாக நடித்தார். அதைத்தொடர்ந்து தொடர்ந்து 'ஈசன்' என்ற படத்தை இயக்கினார். இதன் பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தவரும் சசிக்குமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக கம்பேக் கொடுக்க உள்ளார். சசிக்குமார் இயக்கவுள்ள 3 ஆவது படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். குடும்ப பின்னணி கதையை கொண்ட படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி