நூலிழையில் உயிர் தப்பிய பெண்கள்.. ஷாக் வீடியோ

78484பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ராம்சாகர் பாராவில் நடந்த ஒரு விபத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வீட்டின் வெளியே இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு பிக்கப் ட்ரக் வாகனம் வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த வாகனம் அப்படியே கவிழ்ந்தது. கவிழ்ந்த வாகனம் அந்த பெண்களுக்கு மிக அருகில் விழுந்தது. அந்த வாகனத்தை ஒட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி