அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புதன்கிழமை காலை 7.53 மணியளவில்
நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது. சமீபகாலமாக உலகம் முழுவதும்
நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த புத்தாண்டின் போது ஜப்பானில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.