வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துரை வைகோ!

78பார்த்தது
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துரை வைகோ!
வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வைகோ அவர்களுக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலி மட்டுமே உள்ளது. வழக்கமான உணவை உண்ணுகிறார். அவருக்கு பிடித்தமான டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். வைகோ விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பியதும் தொண்டர்களை சந்திப்பார்" என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி