போதையில் மட்டையான காவலர்.. அதிர்ச்சி வீடியோ

86179பார்த்தது
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் பாபநாசம் ரயில் நிலையத்தில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் காவலுக்கு வைக்கப்பட்டிருந்த 3 காவலர்கள் போதையில் இருந்துள்ளனர். அதில் ஒரு காவலர் போதை தாலிக்கு ஏறி மணமகன் அறையில் மட்டையாகியுள்ளார். இதனை வீடியோ எடுத்த விவசாயிகள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். இத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி