போதையில் இருந்த லாரி ஓட்டுநர் - மின்கம்பத்தில் மோதி விபத்து

67பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் இருந்து இன்று (மே 29) இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மாங்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, லாரியில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி