"பேராசை கூடாது.!" செல்பெருந்தகைக்கு ஈவிகேஎஸ் பதிலடி

11850பார்த்தது
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, “எத்தனை நாள் நாம் பிற கட்சிகளை சார்ந்து இருக்கப் போகிறோம்.?” என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அந்தக் கூட்டத்திலேயே பதிலடி கொடுத்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், “திமுக இல்லை என்றால் நாம் இத்தனை எம்.பிக்களை பெற்றிருப்போமா? ஆசை இருக்க வேண்டியது தான். ஆனால் அது பேராசையாக மாறி ஒன்றுமில்லாமல் ஆகிவிடக்கூடாது. திமுகவும் மு.க ஸ்டாலினும் வாழ்க” என்று அவர் பேசினார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி