ஜார்ஜியாவின் கொலம்பஸைச் சேர்ந்த ஜான் பெம்பர்டன் என்ற நபர் உள்நாட்டுப் போரில் காயமடைந்தபோது, அவர் தனது காயங்களைக் குணப்படுத்த போதை மருந்தான மார்பைனை எடுத்துக் கொண்டார். அதனால் அதற்கு அடிமையானார். மருந்து வடிவில் எடுக்க வேண்டாம் என யோசித்த அவர், வேறு வழியை யோசித்தார். அவர் சொந்தமாக கோகோ ஒயின் தயாரித்தார். அவற்றில் மது மற்றும் கொக்கைன் கலந்து குடித்து வந்தார். 1886ம் ஆண்டில், அவர் மது அல்லாத பதிப்பை உருவாக்க கோகோ கோலாவை உருவாக்கினார். இப்படிதான் கோகோ கோலா என்ற பானம் உருவானது.