திமுகவினர் தொடர்பை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை

70பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான உண்மையை மறைக்க திமுக முயற்சி செய்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவர் தப்பிக்க முயன்ற போது போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில், "சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது" என திருவேங்கடம் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி