சிபிஐ கட்சிக்கு பச்சைக் கொடி காட்டிய திமுக

69316பார்த்தது
சிபிஐ கட்சிக்கு பச்சைக் கொடி காட்டிய திமுக
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் - திமுக தொகுதி பங்கீட்டுக்குழு இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ நிர்வாகிகள், திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். எத்தனை தொகுதியில் போட்டி என்பது குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்ற இடங்களை மீண்டும் கோரியுள்ளோம். எங்களுக்கு மன திருப்தி அளிக்கும் வகையில் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இது பற்றி அறிவிக்கப்படும் என்று கூறினர். ஏற்கனவே திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிபிஐ கட்சிக்கு நாகை, திருப்பூர் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி