வியாபாரி தூக்கிட்டு தற்கொலை!

71பார்த்தது
திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த வியாபாரி தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த வியாபாரி செக்கரியா ஜெயக்குமார் வயது 54. இவர் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி