சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஐவர் பெண்கள் என்றும் இறந்தவர்கள் அனைவருமே தொழிலாளர்கள் எனவும் கூறப்படுகிறது. வெடிகள் தொடர்ந்து வெடித்து சிதறியதால் அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடக்கிறது.