திண்டுக்கல் ஆர். எஸ். ரோடு பகுதியில் வேனில் கொண்டுவரப்பட்ட ரூ. 4. 5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.
பணம் கொண்டுவர பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தங்கத்திற்கான உரிய ஆவணம் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.