சிறுவன் நீரில் மூழ்கியதை பயத்தில் மறைத்த நண்பர்கள்

57பார்த்தது
சிறுவன் நீரில் மூழ்கியதை பயத்தில் மறைத்த நண்பர்கள்
சென்னையில் நீச்சல் தெரியாமல் அடையாறு ஆற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த தனுஷ் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அச்சமடைந்த உடனிருந்த நண்பர்கள் அது குறித்து யாருக்கும் தகவல் சொல்லாமல் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வெகுநேரமாகியும் தனுஷ் வராததால் பதற்றமடைந்த பெற்றோர் நண்பர்களிடம் விசாரித்த போதே உண்மை தெரியவந்தது. தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி