கொடுத்த வாக்கை நிறைவேற்றி உயிரை விட்ட மனைவி

63பார்த்தது
கொடுத்த வாக்கை நிறைவேற்றி உயிரை விட்ட மனைவி
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஓம் நாராயண் - மோகினி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ஓம் நாராயணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணவர் வீடு திரும்புவார் என காத்திருந்த மோகினிக்கு அவர் இறப்பு செய்தி வந்தது. அதை கேட்டவுடன் தரையில் சரிந்து உயிரிழந்தார், இருவரின் சடலங்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன. உறவினர்கள் கூறும்போது, ”ஒன்றாக வாழ்வோம், ஒன்றாகவே இறப்போம் என்ற வாக்குறுதியை தம்பதிகள் உண்மையிலேயே பின்பற்றிவிட்டதாக” தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி